Friday, March 20, 2015



வன்னியர் புராணம் : உலகில் புராணம் கொண்ட ஒரே இனம் 
வன்னியர் இனம் மட்டுமே . 
வன்னியர்
புராணம் என்பது ஸ்ரீ வீர ருத்ர வன்னிய
மகாராஜாவின் தோற்றத்தை பற்றி கூறும் நூல் . 
இந்த ருத்ர வன்னியரின்
வழி வந்தவர்களையே வன்னியர்
என்கிறோம் .
இந்நூல் சுந்தர பாண்டிய மன்னரின்
முன்னிலையில் சைவ ஸ்ரீ வீர
பிள்ளை அவர்களால் எழுத பெற்றது .
சமஸ்கிருத
நூலான
“அக்னி” அல்லது “அக்னேய புராணத்தில்“
இருந்து தமிழில் மொழி பெயர்க்க பட்டது .
இந்நூல்
ஹிந்து மதத்தின் 18 புராணங்களில் ஒன்றாகும் .
இந்த புராணத்தில் வரும் அனைத்து செய்திகளும்
சீர்காழியின் அருகே உள்ள
வைதீஸ்வரன் கோவிலின்
கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது .

ஸ்ரீ வீர ருத்ர வன்னிய
மகாராஜா,
சம்பு மகரிஷி நடத்திய யாகத்தில்
பிறந்ததை பற்றி கூறுவதால்
இந்நூலை சம்பு மைந்தர் காப்பியம் என்றும் அல்லது வன்னியர்
புராணம் என்றும் அழைக்க பெற்றது .

வன்னி என்றால்
அக்னி எனப் பொருள் படும் .

புராணம் :

தூர்வாசகர் முனிவருக்கும்
கஜமோஹினிக்கும் இரண்டு அசுர
குழந்தைகள் பிறந்தனர் .அவர்களின்
பெயர் "வீல்வலன் "மற்றும் "வாதாபி" .
இவர்களின் தாயாரான
கஜமோஹினி என்பவள்
முருகபெருமானால் வதம்
செய்யப்பட்ட சூறபத்மனின் இளைய
தங்கை ஆவாள் . வில்வலனும் வாதாபியும் அகஸ்திய
முனிவரை துன்புறுத்த
ஆரம்பித்தனர் .இதனால் கோபம்
அடைந்த அகஸ்தியர்
வில்வலனை விழுங்கி விட்டார் .

உடனே வாதாபி சிவனை நோக்கி தவம் இருந்து பல சக்திகளையும்
பெற்றான் .அந்த வலிமையின் மூலம் ,
தெற்கு கடற்கரையின் மைய
பகுதியில்
அமைந்திருந்த ரத்னபுரியை அரசால ஆரம்பித்தான் .
பின்னர் மாயனின்
மகளான சொக்க
கன்னியை மனந்தான்
. இவன் செய்யும்
அனைத்து காரியங்களுக்கும் அசுர
குருவான சுக்ராசாரியர்,
வாதபிக்கு துணை இருந்தார் .
பின்னர் வாதாபி தேவர்களை மிகவும்
துன்புறுத்த ஆரம்பித்தான் .

இதை கண்ட நாரத முனி ,
சிவபெருமானிடம் தேவர்களின்
இன்னல்களை கூறினார் .
அதே சமயம்
தேவர்களை காக்க சம்பு மகரிஷி , சிவபெருமானை நோக்கி யாகம்
ஒன்றை நடத்தினார் .
அப்பொழுது சம்பு மகரிஷிக்கு சிவபெருமான்
அருள் பாவித்து, தன்
நெற்றிக்கண்ணில்
இருந்து ஒரு நெருப்பு(வன்னி) துளியை அந்த யாகத்தில் விழ
செய்தார் .
யாகத்தில் விழுந்த அந்த நெருப்பில்
இருந்து , வெள்ளை குதிரையில் கையில் வாளுடனும் , தலையில்
ராஜ க்ரீடத்துடனும் வந்தான்

ஒரு வீரன் .
அவர்தான் “ஸ்ரீ வீர ருத்ர
வன்னிய மஹாராஜா ”. சிவபெருமானும் , தாய்
பார்வதியும் தேவேந்திரனின்
இரண்டாம் மகளான மந்திர மாலையை திருமணம் செய்து வைத்தார்கள் .
மந்திர மாலை என்பவள்
திரு முருகபெருமானின்
மனைவியான தெய்வயானியின்
தங்கையாவாள்.
இவர்களுக்கு நான்கு வீர
ஆண்மகன்கள் பிறந்தார்கள் . அவர்களின்
பெயர்
“கிருஷ்ண வன்னியர் ,
பிரம்ம வன்னியர்,

அக்னி வன்னியர் ,
சம்பு வன்னியர்“ ஆவார்கள் . இவர்களுக்கு காந்தா(சுஷீலா)
என்னும் துறவியின்
நான்கு மகள்களையும் திருமணம்
செய்தார்கள் . அவர்களின்
பெயர் “இந்திராணி , நாரணி ,சுந்தரி ,சுமங்கலி ” ஆவார்கள் .

அசுரனுடன் போர் :

சிவபெருமானின்
அறிவுரைப்படி அசுரன்
வாதாபியை வதம் செய்ய ருத்ர
வன்னியர் , சிவபெருமான் அளித்த தம்
படையுடன்
தெற்கு நோக்கி சென்றார் .
அங்கே உள்ள துர்க்கா பரமேஷ்வரியின்
கோவிலுக்கு சென்று ,போரில்
தமக்கு துணையாக
இருக்குமாறு வணங்கினார் .

அதற்க்கு ஆசி தரும் விதமாக,
துர்க்கையின் பூத படையும் வன்னியருடன் வந்தது . அந்த
படையையும்
அழைத்துகொண்டு ருத்ர வன்னியர்
கடற்கரையை நெருங்கும் போது ,
கடல் தானாக
வழி விட்டது .
அப்பொழுது அவர்களுடன் சென்ற ஒரு நாயால் ,அந்த
கடற்கரையை தாண்ட
இயலவில்லை .
அதனால் அந்த நாய்
மீண்டும் வன்னியரின்
அரண்மனைக்கே திரும்பியது .
ருத்ர வன்னியரும் அவரது படையும்
ரத்னா புரியை அடைந்த
உடன் ,அசுரன்
திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு தர
எண்ணினார் வன்னியர்.

நாரதரை அசுரன் வாதாபியுடன் சமாதானம் பேச அனுப்பினார்.

ஆனால்
அது தோல்வியிலே முடிந்தது .

அதன் விளைவு , வன்னியர்
படைக்கும் அசர படைக்கும்
மிகப்பெரிய போர் உருவாயிற்று .
அசுரர்களின் குலதெய்வமான
காளி அம்மன் ,அசுரர்களுக்கு துணையாக
இருந்தால் .
மிக உக்கிரமாக நடந்த
அந்த போரின் முடிவில் , ருத்ர
வன்னியரின் கையால் அசுரன்
வாதாபி கொல்லப்பட்டான் . பெண்கள் உட்பட
அனைத்து அசுரர்களும் , வன்னியர் படையால் வதம் செய்யப்பட்டனர் . இருப்பினும் சுக்ராசாரியாரின்
யோசனைப்படி ,நான்கு அசுர
பெண்கள் மட்டும் மனித வடிவில்
இருந்தனர் . இவர்களை கண்ட
வன்னியர்கள் ,
இந்த பெண்கள் மனித
குலத்தவர்கள் என்று நினைத்து வன்னியர்கள் ,அவர்களை வதம்
செய்யாமல் தங்களோடு தம்
அரண்மனைக்கு அழைத்து சென்றனர் .
போர் முழுமையாக முடிந்தவுடன்,
துர்க்கையை தரிசித்து விட்டு ருத்ர
வன்னியரும் அவரது படையும்
தமது இருப்பிடத்திற்கு வந்தனர் .

தம் இருப்பிடத்திற்கு வந்த
ருத்ரா வன்னியர் அதிர்ச்சிக்கு உள்ளானார் .

கடலை தாண்ட முடியாமல்
வீட்டிற்கு வந்த நாயை கண்ட , ருத்ர
வன்னியரின் மருமகள்கள் போரில்
வன்னியர் படை வீழ்ந்தது என
நினைத்து தங்கள் கணவர்மார்களும் மடிந்திருப்பர் என்று நினைத்தும்
தீயை மூட்டி அதில் உடன்
கட்டை ஏறி தங்கள்
உயிரை மாய்த்து கொண்டனர் .

பிறகு , ருத்ர வன்னியரின்
நான்கு வீர திருமகன்களும், தாங்கள் அழைத்து வந்த மனித உருவில்
இருந்த அந்த நான்கு அசுர
பெண்களையும் காந்தர்வ திருமணம்
செய்து கொண்டு ,
அவர்களோடு வாழ

ஆரம்பித்தனர் .

வன்னியர்கள் ஆளும் நிலப்பகுதி :

சிவபெருமானும் , நாராயணனும்
ருத்ர வன்னியரிடம்
“சம்பு பகுதியை ”
ஆட்சி செய்யுமாறு கூறினர் . அதுபோல வடக்கே
“பாலாறு ”
வரை
பிரம்ம வன்னியரிடமும் ,”பெண்ணையாறு ” வரை
கிருஷ்ண வன்னியரிடமும் , அங்கேருந்து வடக்கே “காவேரி ”வரை சம்பு வன்னியரிடமும் , தென்மேற்கு பகுதியை அக்னி வன்னியரிடமும் ஆட்சி செய்யுமாறு கூறினர் .
அதன் பிறகு ,
ருத்ர வன்னியர்
மற்றொரு மகனை ஈன்றெடுத்தார் .

அவர் பெயர் “சந்திர சேகர மகாராஜன் ” .
ருத்ர வன்னியர் , தம்
ஆட்சி பொறுப்பை தமது மகன்
சந்திர சேகர மகாராஜனிடம்
கொடுத்து விட்டு ,
தேவேந்த்ரனின்
அழைப்பை ஏற்று இந்திர லோகத்திற்கு சென்றார் .

குறிப்பு : Mr. Stuart adds that" this tradition alludes to the
destruction of the city of Vapi by Narasimha Varma, king of the Pallis or Pallavas.
" Vapi, or Va- api, was the ancient name of Vatapi or Badami in the Bombay Presidency.
It was the capital of the
Chalukyas, who, during the seventh century, were
at feud with the Pallavas of the south.
"The son of Mahendra Varman I," writes Rai
Bahadur V. Venkayya, "was Narasimha Varman I,
who retrieved the fortunes of the family by
repeatedly defeating the Cholas, Keralas,
Kalabhras, and Pandyas.
He also claims to have
written the word victory as on a plate on Pulikesin's * back, which was caused to be visible
(i.e., which was turned in flight after defeat) at
several battles. Narasimha Varman carried the war
into Chalukyan territory, and actually captured
Vatapi their capital.
This claim of his is established by an inscription
found at Badami, from which it appears
that Narasimha Varman bore the title Mahamalla.

In later times, too, this Pallava king was known as Vatapi Konda Narasingapottaraiyan. Dr. Fleet assigns the capture of the Chalukya capital to
about A.D. 642. The war of Narasimha Varman
with Pulikesin is mentioned in the Sinhalese
chronicle Mahavamsa. It is also hinted at in the
Tamil Periyapuranam.
The well-known saint
Siruttonda, who had his only son cut up and cooked in order to satisfy the appetite of the god
Siva disguised as a devotee, is said to have
reduced to dust the city of Vatapi for his royal
master, who could be no other than the Pallava
king Narasimha Varman

Like Vanniyars,
Rajputs also called them selves as AgniKulaKshatriya and they are
following the Same Agni Puranam as their
Myth.
Even some Gujarati comunities called
themselves as Vaniya

No comments:

Post a Comment