Tuesday, April 25, 2017

இராஜேந்திரசோழன் இராஜகேசரிவர்மன்:

-------------------
இராஜேந்திரசோழன் இராஜகேசரிவர்மன்: 
=======
வன்னியபுரம் என்னும் சிறு குக்கிராமத்தை உன் ஆட்சி காலத்திலே மாபெரும் சோழர்களின் தலைநகராக்கியவனே. 

உம் பெரும்படையாம் பள்ளிவாழ்(ள்) போர்படையின் கங்கை நாட்டின் வெற்றியால் உம் வன்னியபுரத்தையே தலைமையாக கொண்டு மாபெரும் கற்றளியை எடுபித்து அக்கற்றளிக்கு கங்கைகொண்டசோழீஸ்வரர் என் பெயர் சூட்டி வன்னியபுரத்தை கங்கைகொண்டசோழபுரம் ஆக்கிய பெரும்பள்ளியே. 

உம் அப்பன் இராஜராஜனும் செய்யாத ஒப்பற்ற புனிதத்தை உம் படையாட்சிகளுக்கு வித்திட்டு சென்றவனே.

ஆயிரம் ஆண்டாய் வன்னிமர விருட்சத்தை உம் மக்களுக்காக உம் கற்றளியில் நட்டு சென்ற ராஜகேசரிவர்மனே.

இராஜராஜபெரும்பள்ளியாரும் செய்யாத பெருமையை உம் மக்களுக்காக மட்டுமே வித்திட்டு சென்ற செம்பொன்பள்ளியார் சிவனின் மகனே.

நீ கட்டிய கற்றளி ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் இன்றும் உம் படையாட்சிகளின் பிடியிலையே உம் பாரம்பரியம்.
---------

No comments:

Post a Comment