Sunday, September 25, 2016

முதலாம் குலோத்துங்கச் சோழனின் பட்டத்தரசியான காடவன் மாதேவி


------------------------------------
காடவன் மாதேவியான விருதராஜபயங்கர சதுர்வேதிமங்கலம்:
====================================
முதலாம் குலோத்துங்கச் சோழனின் பட்டத்தரசியான "காடவன் மாதேவி" அவர்கள், பல்லவ வம்சத்தில் தோன்றிய அரசியாவார்கள். பள்ளி குல காடவராய கோப்பெருஞ்சிங்கனின் வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இவர்களது பெயரினில் ஓர் "சதுர்வேதிமங்கலம்" அமைந்திருந்தது என்பதை சோழர்கள் காலக் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது :-
"காடவன் மாதேவி ஆன விருதராஜபயங்கர சதுர்வேதிமங்கலம்" (S.I.I Vol-II, No.22, Page - 114)
"விருதராஜா பயங்கரன்" என்பது முதலாம் குலோத்துங்கச் சோழனின் பெயராகும். அவன் "பல விருதுகள் பெற்ற அரசர்களுக்கெல்லாம் பயங்கரமான அச்சத்தை கொடுப்பவன்" என்பதால் "விருதராஜ பயங்கரன்" என்று அழைக்கப்பெற்றான்.
சோழ மன்னர்கள், "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தைச் சேர்ந்த அரசியார் "காடவன் மாதேவி" பெயரிலும் சதுர்வேதிமங்கலத்தை ஏற்படுத்தி அதை "பிராமணர்களுக்கு" கொடுத்திருக்கிறார்கள் என்பது உண்மையிலே வன்னியர்கள் பெருமையடையவேண்டிய விஷயமாகும்.
வன்னிய மன்னர்களான நிலகங்கரையர்களும், சம்புவராயர்களும் கீழ்கண்ட சதுர்வேதிமங்கலங்களை, பிராமணர்களுக்கு அமைத்து கொடுத்திருக்கிறார்கள் என்பதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அவை :-
"பஞ்சநதிவாணச் சதுர்வேதிமங்கலம்"
"ஆதிநாயகச் சதுர்வேதிமங்கலம்"
"சம்புகுலப் பெருமாள் அகரமான இராஜ கம்பீரச் சதுர்வேதிமங்கலம்"
"செய்யாற்று வென்றான் சதுர்வேதிமங்கலம்",
"ஸ்ரீ மல்லிநாதச் சதுர்வேதிமங்கலம்",
"வீரகம்பீர சதுர்வேதிமங்கலம்",
"ஸ்ரீமத் ராஜநாராயணச் சதுர்வேதிமங்கலம்"
"காங்கயநல்லூரான நீலகண்டர் சதுர்வேதிமங்கலம்"
"ஓசூரான காலிங்கராய நல்லூரான காலிங்கராயச் சதுர்வேதிமங்கலம்"
"இந்திரவனமான இராசநாராயணக்கவனமங்கலம்"
சதுர்வேதிமங்கலங்களை க்ஷத்ரியர்களான வன்னியர்கள், பிராமணர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்தது என்பது அவர்களின் மீது வைத்திருந்த மிகப்பெரிய மரியாதையை காட்டுகிறது. இன்றும் பல வன்னியர்கள் பிராமணர்களின் மீது மிகப்பெரிய மரியாதையை வைத்திருக்கிறார்கள் என்பது உண்மையாகும்.
----- xx ----- xx ----- xx -----


Thanks To: NMurali Naicker Anna.

No comments:

Post a Comment