Sunday, May 10, 2015






சோழர்கள் கல்வெட்டுகளில் வன்னிய நாடாழ்வார்கள் :
==================================================
செங்கல்பட்டு, திருவடிசூலம் ஞானபுரிஸ்வரர் கோயிலில் உள்ள விக்கிரம சோழன் (கி.பி.1128) காலத்திய கல்வெட்டு ஒன்று "வன்னிய நாடாழ்வார்" பற்றி குறிப்பிடுகிறது. அவர் "புலிப்பாக்க நாடாழ்வான்" என்பவர் ஆவார்.
"இவ்வூர் இருக்கும் பள்ளி புலிப்பாக்க நாடாழ்வான்"
(காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள், தொடர் எண் : 19/1998, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை), (A.R.E. No.339 of 1908).
----- xx ----- xx ----- xx -----
உத்திரமேரூர், வயலக்காவூர் ஸ்ரீ வாகீசுவரர் கோயிலில் உள்ள இரண்டாம் இராஜ ராஜ சோழன் (கி.பி.1168) காலத்திய கல்வெட்டு ஒன்று "வன்னிய நாடாழ்வார்" பற்றி குறிப்பிடுகிறது. அவர் "சிபாத நாடாழ்வான்" (ஸ்ரீபாத நாடாழ்வான்) என்பவர் ஆவார். அவருடைய மகன் பெயர் "செல்வப் பிள்ளை" என்பதாகும்.
"இவ்வூரில் இருக்கும் பள்ளிகளில் சிபாத நாடாழ்வான் மகன்
செல்வப்பிள்ளை"
(காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள், தொடர் எண் : 62/2005, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை), (A.R.E. No.250 of 1922).
----- xx ----- xx ----- xx -----
விருதாச்சலம், திருவாடத்துறை தீர்தபுரிசுவரர் கோயிலில் உள்ள பரகேசரி வர்மன் (என்னும்) வீர ராஜேந்திர சோழன் (கி.பி.1066) காலத்திய கல்வெட்டு ஒன்று "வன்னிய நாடாழ்வார்" பற்றி குறிப்பிடுகிறது. அவர் "ஜெயம்கொண்ட சோழ தூண்ட நாடாழ்வான்" ஆவார். "தூண்ட நாடாழ்வார்கள்", சோழர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக விளங்கியுள்ளார்கள். இவர்கள் குறுநில மன்னர்களான "இருங்கோளர்களுக்கு" (வேளிர்கள்) உறவினர்கள் ஆவர்.
"பள்ளி கூத்தன் பக்கநாந ஜெயம்கொண்ட சோழ தூண்ட நாடாழ்வான்"
(A.R.E. No.230 of 1928-1929)
----- xx ----- xx ----- xx -----
அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் வட்டம், திருமழப்பாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் இருக்கும் இரண்டாம் ராஜ ராஜ சோழன் (கி.பி.1146 - 1163) காலத்திய கல்வெட்டில் ஒன்று "வன்னிய நாடாழ்வார்கள்" பற்றி குறிப்பிடுகிறது. அவர்கள் "அரசூர் நாடாழ்வார்" மற்றும் அவரின் தம்பி "நாயனான் தூண்ட நாடாழ்வான்" ஆவார்கள். குறுநில மன்னர்களான தூண்ட நாடாழ்வார்கள் "க்ஷத்ரியர்களான வாணகோவரையர்களுடன்" நெருங்கிய தொடர்புடையவர்கள் ஆவர்.
"இவ்வூர்க் காவற்காணியுடைய கூத்தப்பெருமான் அரசூர் நாடாழ்வான்"
"இவன் தம்பி நாயனாந் தூண்ட நாடாழ்வான்". (S.I.I. Vol-V, No.632).
----- xx ----- xx ----- xx ----
Thanks To : Nmurali Naicker Anna.

No comments:

Post a Comment