Friday, July 22, 2016

வன்னிய இன குரு:ராஜ ரிஷி சு.அர்த்தநாதீஸ்வர வர்மா

===================================

வன்னிய இன குரு:ராஜ ரிஷி சு.அர்த்தநாதீஸ்வர வர்மா:

=================
இந்திய விடுதலை, தமிழ் மொழி மேம்பாடு மற்றும் தான் பிறந்த வன்னியகுல க்ஷத்ரிய இனம் உயர்வு பெறவேண்டும் என்ற நோக்கங்களுக்காகவே வாழ்ந்தவர் சேலம் கவிச்சிங்கம் ராஜ ரிஷி சு. அர்த்தநாதீஸ்வர வர்மா அவர்கள். 
----------------------
வன்னியர் மேம்பாட்டுக்காக க்ஷத்ரியன், க்ஷத்ரிய சிகாமணி மற்றும் தமிழ் மன்னன் ஆகிய இதழ்களையும். நாட்டு விடுதலைக்காக வீரபாரதி என்ற இதழையும் நடத்தினார் வர்மா.
----------------------
வர்மா தனது பணிக்காக குடும்பத்தை இழந்தார். அவருக்கு இரண்டு திருமணங்கள் ஆகி இருக்கிறது என்பதையும், தீவிர சமூக பணிக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவர்கள் தற்கொலை செய்து மாண்டு போய் இருக்கிறார்கள் என்பதையும் அவரது எழுத்துக்களை வைத்தும் அவரோடு பழகியவர்கள் சொல்லும் தகவல்களை வைத்தும் யூகிக்க முடிகிறது.
----------------------
தன்கென்று எந்த சொத்தும் இல்லாமல் துறவியை போல வாழ்ந்த வர்மா அவர்கள் வன்னியர் பூமியான   அதாவது அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் தன் உயிர் பிரியவேண்டும் என்று விரும்பி இருக்கிறார். 
----------------------
தன் இறுதி காலத்தை திருவண்ணாமலையில் கழித்த வர்மா 07  -12  - 1964  ஆம் அன்று காலமானார்.
----------------------

No comments:

Post a Comment